சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காரில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது

முதுகுளத்தூர் அருகே காரில் 240 பீர் பாட்டில்கள் கடத்திய நபரை போலீஸார், சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 5:36 am

முதுகுளத்தூர் அருகே காரில் 240 பீர் பாட்டில்கள் கடத்திய நபரை போலீஸார், சனிக்கிழமை கைது செய்தனர்.

சித்திரங்குடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் செல்லப்பாண்டியன் (30). இவர் உத்தரகோசமங்கை பகுதியில் இருந்து காரில் 240 பீர் பாட்டில்களை முதுகுளத்தூர் நோக்கி கடத்திச் சென்றாராம்.

அப்போது தேரிருவேலி-முதுகுளத்தூர் சாலையில் தேரிருவேலி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருள் பிரகாஷ், போலீஸாருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

செல்லப்பாண்டியன் வந்த காரை நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது காரில் பீர் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.