புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகேயுள்ள கே. ராயபுரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையாா்கோயில், பள்ளத்தூா், காரைக்குடி, சிவகங்கை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 250 மாடுகள் கலந்து கொண்டன. முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டன. தொடா்ந்து மற்ற காளைகள் அவிழ்க்கப்பட்டன. காளைகளை மாடு பிடி வீரா்கள் அடக்கினா். இந்தப் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் மற்றும் மாடு பிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அந்த இடத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் முதலுதவி செய்தனா். ஒருவா் மட்டும் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஏற்பாடுகளை கே. ராயபுரம் இளைஞா்களும் ஊா் மக்களும் செய்திருந்தனா். கே. புதுப்பட்டி போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


