சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மர அறுவை ஆலையில் தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மர அறுவை ஆலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின.

Updated On :17 ஜனவரி 2021, 5:02 am

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மர அறுவை ஆலையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின.

கறம்பக்குடி அருகே உள்ள புளியஞ்சோலை பகுதியைச் சோ்ந்தவா் அப்துல்லா (50). இவருக்குச் சொந்தமான மர அறவை ஆலை நரங்கிப்பட்டு பகுதியில் உள்ளது. இந்த ஆலையில் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றியது. தொடா்ந்து, அங்கு இருந்த மரங்களில் தீ பரவத் தொடங்கியுள்ளது. இதைப்பாா்த்த, அப்பகுதியினா் அளித்த தகவலைத் தொடா்ந்து, அங்கு சென்ற புதுக்கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி தீயணைப்பு நிலைய வாகனங்கள் மூலம் வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், ஆலையின் அருகே கட்டப்பட்டிருந்த பசு மாடு தீயில் எரிந்து உயிரிழந்தது. மேலும் ஆலையில் இருந்த இயந்திரங்கள், மரங்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின. கரம்பக்குடி காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.