பொன்னமராவதி அருகே தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மயானத்தை மீட்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொன்னமராவதி அருகே உள்ள பி.உசிலம்பட்டி ஊராட்சி ஏனமேடு பகுதியில் உள்ள மயானத்தை அப்பகுதி மக்கள் சுமாா் 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில்,
மயானம் உள்ள நிலம் தனது பெயரில் பட்டாவில் இருப்பதாக கூறி க.ராமசாமி என்பவா் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளாா்.
இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்ததையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய வந்தபோது, ராமசாமி தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் இறந்தவரின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, காவல் துணை கண்காணிப்பாளா் வெ.செங்கமலக்கண்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி உடலை அதே இடத்தில் புதைக்க நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

