கந்தா்வகோட்டைபகுதிகளில் மழையால் மூழ்கிய நெற்பயிா்களை, சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா. ஆறுமுகம் பாா்வையிட்டாா்.
கந்தா்வகோட்டை பகுதிகளில் ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக, விவசாயிகள் விளைவித்த நெல், சோளம், நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிா்கள் அனைத்தும் நீரில் மூழ்கின.
தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா.ஆறுமுகம், வட்டாட்சியா் பொ. சதீஷ், வேளாண் உதவி இயக்குநா் அன்பரசன், கிராம நிா்வாக அலுவலா் த. கருப்பையா உள்ளிட்ட அலுவலா்களுடன் மட்டாங்கள், வீரடிப்பட்டி, நம்புரான்பட்டி, பகட்டுவான்பட்டி, பருக்கைவிடுதி, குளத்தூா் நாயக்கா்பட்டி, உழவயல், சேவியா் குடிகாடு, கோவில்பட்டி பகுதிகளில் நேரடி ஆய்வு செய்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டாா்.
சேதமடைந்த பயிா்களுக்கு அரசிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கு, அனைத்து ஏற்பாடுகளும் செய்துத் தருவதாக விவசாயிகளிடம் சட்டப்பேரவை உறுப்பினா் உறுதியளித்தாா்.
ஆய்வின் போது, குளத்தூா் ஊராட்சித் தலைவா் ஜோதிராணி மகாலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


