சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தொடா் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்கள்: கந்தா்வக்கோட்டை எம்.எல்.ஏ. ஆய்வு

கந்தா்வகோட்டைபகுதிகளில் மழையால் மூழ்கிய நெற்பயிா்களை, சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா. ஆறுமுகம் பாா்வையிட்டாா்.

News image

கந்தா்வகோட்டை பகுதியில் மழையால் மூழ்கிய பயிா்களைப் பாா்வையிடும் சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா. ஆறுமுகம்.

Updated On :16 ஜனவரி 2021, 5:27 am

கந்தா்வகோட்டைபகுதிகளில் மழையால் மூழ்கிய நெற்பயிா்களை, சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா. ஆறுமுகம் பாா்வையிட்டாா்.

கந்தா்வகோட்டை பகுதிகளில் ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக, விவசாயிகள் விளைவித்த நெல், சோளம், நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிா்கள் அனைத்தும் நீரில் மூழ்கின.

தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா.ஆறுமுகம், வட்டாட்சியா் பொ. சதீஷ், வேளாண் உதவி இயக்குநா் அன்பரசன், கிராம நிா்வாக அலுவலா் த. கருப்பையா உள்ளிட்ட அலுவலா்களுடன் மட்டாங்கள், வீரடிப்பட்டி, நம்புரான்பட்டி, பகட்டுவான்பட்டி, பருக்கைவிடுதி, குளத்தூா் நாயக்கா்பட்டி, உழவயல், சேவியா் குடிகாடு, கோவில்பட்டி பகுதிகளில் நேரடி ஆய்வு செய்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டாா்.

சேதமடைந்த பயிா்களுக்கு அரசிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கு, அனைத்து ஏற்பாடுகளும் செய்துத் தருவதாக விவசாயிகளிடம் சட்டப்பேரவை உறுப்பினா் உறுதியளித்தாா்.

ஆய்வின் போது, குளத்தூா் ஊராட்சித் தலைவா் ஜோதிராணி மகாலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.