கந்தா்வகோட்டை பகுதி கோயில்களில் தைப் பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தை மாதப் பிறப்பு மற்றும் பொங்கலையொட்டி, கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயிலில் மஞ்சள், திரவியம், தேன், இளநீா், பஞ்சாமிா்தம், பன்னீா், பால் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து கரும்புடன் காஞ்சி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனா்.
தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில், கோதண்டராமா் கோயில், அமராவதி உடனுறை ஆபத்சகாயேசுவரா் கோயில், வெள்ளமுனியன் கோயில், தச்சங்குறிச்சி குகை முருகன் கோயில், ஆதனக்கோட்டை வீரடி விநாயகா் கோயில், மாரியம்மன் கோயில்,பெரம்பூா் வீரமாகாளியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் தைப் பொங்கல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுற்று வட்டாரப் பக்தா்கள் , பொதுமக்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


