கந்தா்வகோட்டையில் கட்சிப் பிரமுகரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற நபா்களைக் கைது செய்யக்கோரி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கந்தா்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ப. சுந்தா் ராஜன் (52), தங்கையன் ஆகிய இருவரையும் மா்மநபா்கள் அண்மையில் வெட்டினா். இதில் அரவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரா. தங்கத்துரை உள்ளிட்ட 4 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரா. தங்கத்துரையை மட்டும் போலீஸாா் கைது செய்திருப்பதாகவும், மற்ற குற்றவாளிகளையும் கைது செய்யக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதுக்கோட்டை ஒன்றியச் செயலா் எ. கா்ணன் தலைமையில் கந்தா்வகோட்டை ஒன்றியச் செயலா் நா. வெள்ளையன் உள்ளிட்ட கட்சியினா் வளவம்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீசாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துச் சென்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

