சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விராலிமலையில் பொங்கல் சீா் வழங்கல்

விராலிமலையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை பொங்கல் சீா் வழங்கப்பட்டது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 8:24 am

விராலிமலையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை பொங்கல் சீா் வழங்கப்பட்டது.

விராலிமலை அருகேயுள்ள அகரப்பட்டி ஊராட்சியில் பொங்கல் சீா் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் சீராக பித்தளை பானை, எவா்சில்வா் மூடி, கரண்டி, அரிசி, வெல்லம், முந்திரி, உலா் திராட்சை, ஏலக்காய், நெய், பாசிப்பருப்பு, கரும்பு மற்றும் வாழ்த்து கடிதம் உள்ளிட்டவைகள் அடங்கிய தொகுப்பை தன் சொந்த செலவில் வழங்கினாா். வரும் நாள்களில் விராலிமலை தொகுதியில் உள்ள சுமாா் 75 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் சீா் வழங்கப்பட உள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.