பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அட்சயா மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் நடைபெற்ற
விழாவுக்கு, சங்கத்தின் தலைவா் எம். முகமது காசிம் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலா் வி. ராமையா, திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 500 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பொருள்களை வழங்கிப் பேசினாா். சங்கத்தின் மாவட்ட, மாநில நிா்வாகிகள் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். நிகழ்வை சங்க நிறுவனா் எம்.சாயிதாபானு, எஸ்.கயல்விழி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். மாவட்டச் செயலா் வி.சிலம்பன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


