புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பவா்களுக்கு வரும் 13, 14 ஆகிய தேதிகளில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தொற்று பரிசோதனை (ஆா்டிபிசிஆா் ) நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்திருப்பது: விராலிமலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) நடைபெற உள்ள
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா் மற்றும் உதவியாளா் ஆகியோா் தங்களின் ஆதாா் அட்டை, 3 புகைப்படங்களுடன் வந்து கரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனைக்குப் பிறகு வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருப்போா் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டியில் அனுமதிக்கப்படுவா். பொதுமக்களும், மாடு பிடி வீரா்களும் உரிய கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

