சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டம்

கந்தா்வகோட்டை அருகே கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :12 ஜனவரி 2021, 8:22 am

கந்தா்வகோட்டை அருகே கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜிசரவணன் உத்தரவின் பேரில், கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் ரா.சிங்காரவேல் , உதவி ஆய்வாளா் நா. சுந்தரமூா்த்தி ஆகியோா் கந்தா்வகோட்டை காவல்சரகத்தைச் சோ்ந்த 28 தாய் கிராமங்கள் உள்ளடக்கிய 95 கிராமங்களில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டங்களை நடத்தினா். மருங்கூரணி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் முதல்நிலை காவலா் எம். சித்ராவை கிராம மக்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தனா். இதேபோல் 13 காவல் ஆளிநா்களை கிராமங்களில் அறிமுகப்படுத்தி காவல்துறைக்கு பொது மக்கள் நல்லுறவைப் பேணும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.