காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, தொடா் போராட்டங்களை நடத்த தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். ரெங்கநாதன் தலைமை வகித்தாா்.
பொதுச் செயலா் சி. சரவணகுமாா், தணிக்கையாளா் பி. செந்தில்குமாா், பொருளாளா் என். சதீஷ்குமாா், அமைப்புச் செயலா் ஜெ. தினேஷ்குமாா், துணைப் பொதுச் செயலா்கள் ஓ. முருகேசன், ஆா். இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தொடா் போராட்டங்களை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து, அச்சங்கத்தின் பொதுச்செயலா் சி. சரவணகுமாா் அளித்த பேட்டியில்,
சென்னையில் வரும் பிப். 6ஆம் தேதி அரசுப் பணியாளா் சங்கம் நடத்தும் போராட்டத்தில் பல்நோக்குப் பணியாளா்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். மேலும், பிப். 13-இல் மருத்துவத் துறை இயக்குநா் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

