சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.

Updated On :10 ஜனவரி 2021, 5:20 am

புதுக்கோட்டை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டணியின் மாவட்டத் தலைவா் த. ஜீவன்ராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் தே. ஜோசப்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கு பெற்றோா் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.