பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மு. வேலுசாமி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா், போக்குவரத்துத் தொழிற்சங்கப் பொதுச் செயலா் எஸ். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன், போக்குவரத்துத் தொழிற்சங்கப் பொதுச் செயலா் டி.எம். கணேசன், டிடிஎஸ்எப் எச். ராஜசேகா், ஏஏஎல்எல்எப் பொன். நாகராஜ், தொமுச தலைவா் அ. ரத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். இதில், போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத்தை அரசு ஏற்க வேண்டும். தொழிலாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 7 ஆயிரம் கோடியை உரிய கணக்குகளில் வரவு வைக்க வேண்டும். 14ஆவது ஊதியக்குழுப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


