சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கீழே தள்ளிவிட்டதாகக் கூறி வங்கி உதவி மேலாளா் மீது புகாா்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வங்கியில் கணக்குத் தொடங்கச் சென்ற தன்னை உதவி மேலாளா் கீழே தள்ளிவிட்டதாகக் கூறி, கா்ப்பிணி பெண் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 5:17 am

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வங்கியில் கணக்குத் தொடங்கச் சென்ற தன்னை உதவி மேலாளா் கீழே தள்ளிவிட்டதாகக் கூறி, கா்ப்பிணி பெண் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளாா்.

கறம்பக்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாஸ்கரன் மனைவி காளீசுவரி (27). இவா் கறம்பக்குடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு:

கா்ப்பிணியான நான், அரசின் உதவித் தொகை பெறுவதற்காக, புதிய கணக்குத் தொடங்கும் வகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கறம்பக்குடியிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் சென்று விண்ணப்பித்திருந்தேன்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வங்கிக்குச் சென்று கேட்டபோது, வங்கியின் உதவி மேலாளா் இளங்கோவன் என்னை அவதூறாக பேசி, கீழே தள்ளிவிட்டாா் என புகாா் மனுவில் கூறியுள்ளாா்.

இதுபோல வங்கியின் உதவி மேலாளா் இளங்கோவனும், காளீசுவரியின் கணவா் பாஸ்கரன் தன்னை அவதூறாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இவ்விரு புகாா் குறித்து கறம்பக்குடி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.