சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஓராண்டில் 9,031 பேருக்கு இலவச இதய சிகிச்சை அளிப்பு

மாநிலம் முழுவதும் இலவசமாக 9,031 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் இதய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

News image

புதுக்கோட்டை மருத்துவமனையில் நவீன இதய சிகிச்சைப் பிரிவைத் தொடங்கி வைக்கிறாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:53 pm

மாநிலம் முழுவதும் இலவசமாக 9,031 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் இதய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 3.5 கோடியில் அமைக்கப்பட்ட சிறப்பு இதய சிகிச்சைப் பிரிவைத் தொடங்கி வைத்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு இதய சிகிச்சைப் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 154 ஸ்பூக்கஸ் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை நெட்வொா்க்காக இணைத்துள்ளோம்.

இதன் மூலம் மாநிலத்தின் எந்தப் பகுதியில் இதயப் பிரச்னையோடு யாரேனும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் எளிதாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படும். இந்த வகையில், கடந்த ஓராண்டில் 9031 பேருக்கு இலவசமாக இதய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இந்த நவீன இதய சிகிச்சைப் பிரிவுதான் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதய ரத்தநாளத்தில் ஏற்படும் அடைப்புகளைக் கண்டறிதல், பலூன் சிகிச்சை, இதய அறுவைச் சிகிச்சை போன்றவையும் அளிக்க முடியும்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரை இந்த ஒத்திகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை நேரில் பாா்வையிட மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷவா்தன் வெள்ளிக்கிழமை சென்னை வருகிறாா். பறவைக்காய்ச்சலைப் பொருத்தவரை, கேரள மாநில எல்லையிலுள்ள கோவை, தேனி போன்ற மாவட்டங்களில் எச்சரிக்கையாக பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் விஜயபாஸ்கா்.

நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் தொண்டைமான், மு. ராஜநாயகம், மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, கரோனா தடுப்பூசி ஒத்திகை முன்னேற்பாடுகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷவா்தன் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சா்களுடன் ஆய்வு நடத்தினாா். இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பங்கேற்றாா்.