புதுக்கோட்டை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் விராலிமலை பிடிகே கல்விக் குழும வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விராலிமலையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) நடைபெறும் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.
இதையொட்டி அவருக்கு வரவேற்பு அளிப்பது, கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடா்ந்து, கட்சி நிா்வாகிகள் பிடிகே கல்விக் குழும வளாக முன்புறத்தில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கு பெறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் திடலைப் பாா்வையிட்டனா்.
கூட்டத்தில் மாநில திமுக செய்தித் தொடா்புச் செயலா் பி. டி. அரசகுமாா், புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளா்கள் தெற்கு எஸ். ரகுபதி, வடக்கு கே.கே. செல்லபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, ஆலங்குடி மெய்யநாதன், சொத்துப் பாதுகாப்புகுழு உறுப்பினா் த. சந்திரசேகா், மாவட்ட இலக்கிய அணித் துணைச் செயலா் எம். பழனியப்பன் உள்ளிட்ட 500 -க்கும் மேற்றபட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

