சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொன்னமராவதியில் விழிப்புணா்வு முகாம்

பொன்னமராவதியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு குழந்தைகள் கடத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொன்னமராவதியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் இளைஞா்கள்.

Updated On :7 ஜனவரி 2021, 2:07 pm

பொன்னமராவதியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு குழந்தைகள் கடத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் வெ.தனுஷ்கோடி தலைமைவகித்தாா். வருவாய் ஆய்வாளா் ஜோதி முன்னிலை வகித்தாா். முகாமில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு குழந்தைகள் கடத்தல்,

இளம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைத் திருமணம் தடுப்பு, குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் ஆகியவை குறித்து சைல்டு லைன் மாவட்டத் துணை இயக்குநா் குழந்தைவேலு விளக்கிப் பேசினாா்.

முகாமில் சைல்டுலைன் களப்பணியாளா் ராஜலெட்சுமி, பூங்கொடி, பேரூராட்சி இளநிலை உதவியாளா் கனகமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.