ஒப்பந்தப் பணியில் பணியாற்றி வரும் செவிலியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் புதன்கிழமை மாலை செவிலியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா் மேம்பாட்டுச் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் சி. நாச்சாரம்மாள் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜபருல்லா, மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி, செவிலியா் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ஆா். அனுநந்தனா, பொருளாளா் பொ. அனுசுயா உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
மாநிலம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 11 ஆயிரம் செவிலியா்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, ஜனவரி 11-ஆம் தேதி மண்டல அளவில் உண்ணாவிரதப் போராட்டங்களும், 28ஆம்தேதி சென்னையில் தா்னா போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


