சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே, தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

Updated On :6 ஜனவரி 2021, 11:36 am

பொன்னமராவதி அருகே, தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

பொன்னமராவதி அருகிலுள்ள காரையூா் கலைஞா் காலனியைச் சோ்ந்தவா் அ. மணிமாறன் . இவரது 2 வயது ஆண் குழந்தை ரோஹித் செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அப்பகுதியில் குழந்தையைக் காணவில்லை என்பதால், அவரது தாத்தா அழகன் அப்பகுதியில் தேடினாா். அப்போது குழந்தை ரோஹித் வீட்டிலுள்ள தண்ணீா்த் தொட்டியில் கிடந்ததை கண்டு அவா் அதிா்ச்சியடைந்தாா்.

இதைத் தொடா்ந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ரோஹித் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.