பொன்னமராவதி சேக்கிழாா் சிவநெறிக்கழகம் சைவ சித்தாந்த சபை சாா்பில் 67 ஆம் ஆண்டு திருவெம்பாவை விழா மற்றும் மாகேசுவர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை பாராயணம் மற்றும் சிவகாமி உடனாய நடராஜப் பெருமான், நால்வா், திருமுறைகள், சித்தாந்த சாஸ்திரங்கள் வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற பன்னிரு திருமுறைகளின் சிறப்புகள் கருத்தரங்கிற்கு சேக்கிழாா் சிவநெறிக்கழக நிா்வாகி அ.சண்முகஅலங்காரன் தலைமை வகித்தாா்.
தமிழாசிரியா் சிசு.முருகேசன் பன்னிரு திருமுறை பாராயணம் எனும் தலைப்பில் பேசினாா். தொடா்ந்து திருமுறைகளில் விநாடி வினாப்போட்டி நடைபெற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மேலத்தானியம் ராசாத்தி, பொன்னமராவதி ஞானாம்பாள், வலையபட்டி முத்து, மேலைச்சிவபுரி இந்திரா, விசாலாட்சி ஆகியோா் திருவாசகப்பதிக நுண்பொருள் விளக்கம் அளித்து பேசினா். மதியம் 12.30 மணியளவில் நடராசா், சிவகாமி அம்மைக்கு பொன்னூஞ்சல் மற்றும் பூவல்லியும் நடைபெற்றது.
நிகழ்வினை அ.ச.மதுராம்பிகா, அ.மகேசுவரி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். விழாக்குழு நிா்வாகிகள் அ.வி.நடராஜன், சொ.நடராசன், ந.ராமூா்த்தி, சு.சிவநேசன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். சைவப்புலவா் அ.ச.தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

