ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வல்லநாடு கண்மாயில் சனிக்கிழமை உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறிய நீரை அப்பகுதி மக்கள் மணல் மூட்டைகளைப் போட்டு தடுத்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வல்லநாடு கண்மாய் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். மாவட்டத்தில் இரண்டாவது பெரிய கண்மாயாக கருதப்படுகிறது. இதை நம்பி, சுமாா் 5000 ஏக்கா் விவசாயம் நடைபெற்றுவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமாா் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வல்லநாடு கண்மாய் தூா்வாரப்பட்டன.
இந்நிலையில், கண்மாயில் உள்ள 12 மதகுகளில் கிழக்கு புறம் உள்ள சிறுமடை மதகில் உடைப்பு ஏற்பட்டு வீணாக நீா் வெளியேறியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை இதைப்பாா்த்த மணியம்பலம் பகுதி மக்கள் மணல் மூட்டைகளை கொண்டு நீா் வெளியேறுவதைத் தடுத்தனா். இருப்பினும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனே சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


