சென்னையிலிருந்து திருச்சி வரை இயக்கப்பட்டு வந்த பகல் நேர பல்லவன் விரைவு ரயில் செப்.1 -ம் தேதி முதல் காரைக்குடியிலிருந்து இயக்கப்படும் என்ற அறிவிப்பைததொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்த பல்லவன் ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கம், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மக்கள் காரைக்குடியில் இருந்து சென்னை, கோவை , விழுப்புரம், பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ரயில் பயணிகள் சங்கம், வர்த்தகர் கழகம், நகர் நல இயக்கம், மாவட்ட நுகர்வோர் குழு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பல ஆண்டுகளாக மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.
மேலும், மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அதன் விளைவாக, முதல் கட்டமாக செப்.1 - ம் தேதி முதல் பல்லவன் விரைவு ரயிலை காரைக்குடி-சென்னை இடையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால், தங்களது நெடு நாள் கோரிக்கை நிறைவேறியதால் சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, புதுக்கோட்ட ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ஏ. சந்திரசேகரன், ஆர். சிவகுமார், ஏ. இப்ராகிம்பாபு, வழக்குரைஞர் ஆர். முருகேசன், வர்த்தர்கழக தலைவர் சீனுசின்னப்பா, மாவட்ட காங்கிரஸ் தலைவர் தி. புஷ்பராஜ், நகர் நல இயக்க நிர்வாகி ஆர். சம்பத்குமார், நட்புறவு இயக்க நிர்வாகிகள் ஆர். முத்துச்சாமி, ரவிச்சந்திரன், விவசாயிகள் சங்க நிர்வாகி ஜி.எஸ். தனபதி, டாக்டர் கே.எச். சலீம் உள்ளிட்டோர் பங்கேற்று பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

