சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெண்களின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஜே.சி.ஐ மற்றும் இன்ஸ்பயர்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:38 pm

புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஜே.சி.ஐ மற்றும் இன்ஸ்பயர் டெக்னாலஜிஸ் சார்பில் வேலைவாய்ப்புத் திறன் வளர்த்தல் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் தேனி ஜே.சி.ஐ. மண்டல பயிற்றுனர் முனைவர் கீதா, ஜே.சி.ஐ கிங்ஸ் தலைவர் கே. சேதுரத்தினம், இன்ஸ்பயர் டெக்னாலஜிஸ் என். பிரபு, முன்னாள் ஜே.சி.ஐ சங்கமம் தலைவர் கோமதிசங்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் வீ. வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜானகி சுவாமிநாதன் தொடக்கி வைத்தார்.

ஏற்பாடுகளை ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் வி. ரம்யா செய்திருந்தார்.