சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கு

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:39 pm

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் புதுக்கோட்டை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை ஆகிய மூன்று இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற பயிற்சி முகாமை மாநிலப் பொருளாளர் எல்.பிரபாகரன் தொடக்கி வைத்தார். கருத்தாளர்கள் அ. மணவாளன், எம். பழனிச்சாமி உள்ளிட்டோர் ஆற்றல் வளங்கள், ஆற்றலும் சமூகமும் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சியளித்தனர்.  அறந்தாங்கியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை தலைமை ஆசிரியர் ராஜசேகரன் தொடக்கி வைத்தார். கந்தர்வகோட்டையில் மாவட்டத் துணைத்தலைவர் பொன். கருப்பையா தொடக்கி வைத்தார். மூன்று இடங்களிலும் நடந்த முகாம்களில் 125 வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. சதாசிவம், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.