சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் பேரணி

புதுகை நகராட்சியில் உள்ள காமராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:38 pm

புதுகை நகராட்சியில் உள்ள காமராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும், காமராஜர் பெயரில் கடந்த 50 ஆண்டுகளாக காமராஜபுரம் என அழைக்கப்பட்டுவரும் இப்பகுதியை கணேஷ்நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். நகர் நல மையத்தில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த பேரணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்த பேரணியைத் தொடர்ந்து மாவட்ட

வர்த்தகர் கழகத்தலைவர்

சீனு. சின்னப்பா தலைமையில் பொதுமக்கள், வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.