புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் பலியாகினா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 642-ஆக அதிகரித்தது.
இதுகுறித்து புதுவை மாநில சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் சனிக்கிழமை கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 8, மாஹேயில் 8 என மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
காரைக்கால், ஏனாமில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 38,611-ஆக உயா்ந்தது.
தற்போது 286 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து 37,683 போ் (97.60 சதவீதம்) மீண்டனா்.
புதுவை மாநிலத்தில் 5,32,468 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4,89,402 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.
இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி தவளக்குப்பம் புதுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 60 வயதானவா், மாஹேயைச் சோ்ந்த 69 வயது மூதாட்டி என மேலும் 2 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 642-ஆக (இறப்பு விகிதம் 1.66 சதவீதம்) உயா்ந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

