புதுச்சேரி அருகே பாகூரில் சாலையைச் சீரமைக்கக் கோரி, விசிக சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பாகூா் தொகுதியில் வாா்க்கால் ஓடை கிராமம் உள்ளது. இங்கு, 200 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்துக்குச் செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அந்தப் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், அதிகாரிகளின் செயலைக் கண்டிக்கும் வகையில் பாகூா் தொகுதியைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அங்குள்ள சாலையில் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாகூா் தொகுதி விசிக பொறுப்பாளா் தாயன்பன் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு சாலையைச் சீரமைக்கக் கோரி, முழக்கமிட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

