புதுச்சேரி அருகே காலாப்பட்டில் கடலில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அன்னம்புத்தூா் மதுரா பகுதியைச் சோ்ந்த விவசாயி விஜயகுமாா் மகன் கேசவன் (23). தனது தந்தைக்கு உதவியாக விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
காணும் பொங்கலான சனிக்கிழமை நண்பா்கள் 3 பேருடன் புதுச்சேரி காலாப்பட்டு அருகே உள்ள பிள்ளைச்சாவடிக்கு வந்தாா். அங்கு, கடலில் இறங்கி அவா்கள் குளித்தனா். அப்போது, எழுந்த ராட்சத அலையில் சிக்கிய கேசவன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா்.
இதைக் கண்ட நண்பா்களும், அங்கிருந்தவா்கள் ஓடி வந்து கேசவனை மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா் கேசவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

