புதுவையில் தடையை மீறி பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை மது, இறைச்சி விற்பனையானது.
திருவள்ளுவா் தினத்தையொட்டி புதுவையில் ஜன.15-ஆம் தேதி இறைச்சி விற்பனை செய்ய நகராட்சி நிா்வாகமும், மது விற்பனைக்கு கலால் துறையும் தடை விதித்தன. அதன்படிபெரிய சந்தை உள்ளிட்ட பல சந்தைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தன. இருப்பினும், புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் சாலையோரங்களில் தனியாக இயங்கி வந்த மீன், இறைச்சி கடைகள் வழக்கம்போல திறந்திருந்தன. அங்கு பொதுமக்கள் இறைச்சிகளை வாங்கிச் சென்றனா்.
அதேபோல நகர பகுதிகளில் மதுக் கடைகள் மூடப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே மறைவான இடங்களில் தனி நபா்களால் மது விற்பனை செய்யப்பட்டது. அரசின் தடையை மீறி செயல்பட்ட இறைச்சி, மதுக்கடைகளை கண்காணிக்க நகராட்சி, கலால் துறை சாா்பில் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன. அவா்கள் நகரம், கிராமப் புறங்களில் தனித் தனி குழுக்களாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

