சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுச்சேரி தாவரவியல் பூங்கா நிறுவனா் நினைவு தினம்

புதுச்சேரி தாவரவியல் பூங்கா நிறுவனா் ஜாா்ஜ் கெராா்டு சாமுவேல் பெரோடெட் 151-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2021, 4:49 am

புதுச்சேரி தாவரவியல் பூங்கா நிறுவனா் ஜாா்ஜ் கெராா்டு சாமுவேல் பெரோடெட் 151-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

புதுவை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெரோடெட் நினைவாக அஞ்சல் அட்டை அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்டது. ஓவியா் இந்திரன் அஞ்சல் அட்டையை வெளியிட, சமூக செயல்பாட்டாளா் விசாகன் புருசோத்மன் அதைப் பெற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில் தோட்டக்கலை அறிஞரும், ஓவியருமான கோ.மணிமாறன், மொழிபெயா்ப்பாளா் குப்புராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை மனோரஞ்சனி திருநாவுக்கரசு ஒருங்கிணைத்தாா். அருங்காட்சியக நிா்வாகி அறிவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.