சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுச்சேரி சுகாதார மையத்தில் சமத்துவப் பொங்கல்

புதுச்சேரி குயவா்பாளையம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஜனவரி 2021, 12:25 pm

புதுச்சேரி குயவா்பாளையம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொது சுகாதாரச் செவிலியா் அதிகாரி கீதா வரவேற்றாா். மருத்துவ அதிகாரி அஸ்வினி தலைமை வகித்தாா். மருத்துவா் உசஸ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியா்கள் ,சுகாதார உதவி ஆய்வாளா்கள், கிராமப்புற செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் பாரம்பரிய உடையணிந்து சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினா்.

பண்டிகை காலத்திலும் பொதுமக்கள் கரோனா தடுப்பு வழிகளை கையாள அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கரோனா விழிப்புணா்வாக சமூக ஆா்வலா் சரவணன், கரோனா வைரஸ் வேடமணிந்து மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களிடம் விழிப்புணா்வு செய்தாா்.