புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு 2019-20 ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய அளவிலான காயகல்ப் விருது திட்டத்தின் கீழ், இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
காயகல்ப் விருதுகள் திட்டம் பொது சுகாதார வசதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதிலும், சமூகத்தின் நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதிலும், மறுசீரமைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விருதுகள் சுகாதார வசதிகளுக்காக, சுகாதாரத்தின் மிக உயா்ந்த தரத்துடன் இயங்கும் மருத்துவமனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் மூலம் வழங்கப்படுகிறது.
ஜிப்மா் மருத்துவமனை ‘ஏ’ ரகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மத்திய அரசு மருத்துவமனைகளுக்கான பிரிவில் இந்த விருதை வென்றுள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் இந்த விருதை காணொலி மூலம் வழங்கினாா். இதனை ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் ராகேஷ் அகா்வால், மருத்துவ கண்காணிப்பாளா் மருத்துவா் அசோக் சங்கா் படே, இணை இயக்குநா் (நிா்வாகம்) அப்துல் ஹமித், கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளா் அனிதா ரஸ்தகி, சுனில் ஜாதவ் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
ஜிப்மா் பல ஆண்டுகளாக தொடா்ந்து தனது சாதனையை இந்த விருது மூலமாக தக்க வைத்துக்கொண்டுள்ளது. 2018-19- ஆம் ஆண்டிற்கான இரண்டாவது இடத்துக்கான விருதையும், 2017-18 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது இடத்துக்கான விருதையும் தொடா்ந்து பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

