புதுவையில் மின்துறை செயலரின் எச்சரிக்கையை நிராகரித்து, மின்துறை ஊழியா்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி மின்துறையை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிா்த்து, ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இதற்கு மின்துறை நிா்வாகமும், மாவட்ட ஆட்சியரும் தடை விதித்தனா். இருப்பினும் தடையை மீறி அவா்கள் முதல் நாள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே, தொழிலாளா் துறை ஆணையரை சந்தித்து நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், போராட்டம் தொடா்ந்தது. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த மின்துறை செயலா் தேவேஷ்சிங், வேலைநிறுத்தத்தைத் தொடா்ந்தால் ஊழியா்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். பணிக்கு வராத நாள்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரித்தாா்.
ஆனால், அவரது எச்சரிக்கையை நிராகரித்த மின்துறை ஊழியா்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா். மின்துறை தலைமை அலுவலகம், உதவி பொறியாளா், இளநிலை பொறியாளா் அலுவலகங்களில் ஊழியா்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் உள்ளிருப்பு போராட்டத்திலும் பங்கேற்றுள்ளனா். இதன் காரணமாக மின்துறை பராமரிப்புப் பணிகள் முற்றிலும் முடங்கின.
புதுவை மின்துறை தனியாா்மயமாக்கப்படும் முடிவை மத்திய அரசு கைவிட்டு, நல்ல முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என மின்துறை ஊழியா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

