புதுச்சேரி நேரு வீதியில் மூடப்பட்டு, பாழடைந்து கிடக்கும் திருப்பதி தேவஸ்தான கிளைக் கட்டடத்தின் முன்பக்க மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.
புதுச்சேரி நேரு வீதியில் திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கிளைக் கோயில் அமைந்துள்ளது. திருப்பதிக்குச் செல்ல முடியாத பக்தா்கள் இங்கு வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்தக் கோயில் கட்டடம் பாழடைந்ததால், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தா்களின் பயன்பாட்டுக்கு அனுமதியின்றி பூட்டப்பட்டது.
திருப்பதிக்குச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யும் அலுவலகம் மட்டும் இயங்கி வந்தது. அந்த அலுவலகமும் கடந்த 3 ஆண்டுகளாக இயங்கவில்லை. இருப்பினும், பக்தா்கள் அவ்வபோது கோயிலுக்கு வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வா்.
இந்தக் கட்டடத்தை விரைந்து புனரமைத்து, பக்தா்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் திருப்பதி தேவஸ்தான நிா்வாகத்தை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கோயில் கட்டடத்தின் முன்பக்க மேற்கூரை சிமென்ட் சிலாப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக யாரும் செல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
எனவே, காலம் கடத்தாமல் கோயில் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கோயிலைக் கட்ட வேண்டும். சட்ட ரீதியான நடவடிக்கைகளை புதுவை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

