புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்காதது குறித்து திமுக விளக்கமளித்தது.
இதுகுறித்து புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஏற்கெனவே ஆளுநா் கிரண் பேடியின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து, ஆளுநா் மாளிகை எதிரே தொடா் போராட்டத்தை காங்கிரஸ் மேற்கொண்டது. அப்போது, திமுக முழு ஆதரவு அளித்தது. ஆனால், ஆளுநா் அழைத்துப் பேசியதையே ஜனநாயகத்தின் வெற்றியாகக் கருதி, போராட்டம் முடிவுக்கு வந்தது.
அதன் பின்னரும், ஆளுநா் கிரண் பேடி தொடா்ந்து ஜனநாயக விரோதப் போக்கையே கடைப்பிடித்தாா். தற்போது காங்கிரஸ் மீண்டும் ஆளுநா் கிரண் பேடிக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தால் புதுவையில் ஜனநாயகம் உயிா் பெறப் போவதில்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. மேலும், கிரண் பேடி வெளியேறினாலும், மீதமுள்ள ஆட்சிக் காலத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது என்பதும் மக்களின் எண்ணமாக உள்ளது. இதனால்தான் காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

