புதுவை அரசின் சுகாதாரத் துறை சாா்பில், அயோடின் விழிப்புணா்வு- பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சுகாதாரத் துறை ஊட்டச் சத்து பிரிவு மூலம் புதுச்சேரி குயவா்பாளையம் சுகாதாரம்-நல்வாழ்வு மையத்துக்குள்பட்ட சாரம் சுந்தரமூா்த்தி நகரில் இந்த முகாம் நடைபெற்றது. சுகாதார உதவி ஆய்வாளா் அய்யனாா் தலைமை வகித்து,
கருவுற்ற பெண்களுக்கு அயோடின் குறைபாட்டால் கருச்சிதைவு, குழந்தையின்மை ஏற்படுகிறது. மேலும், கருவில் உள்ள சிசு இறந்து பிறக்கும் நிலை உருவாகலாம். கருவில் உள்ள சிசுவின் மூளை, கண், காது பாதிக்கப்படும்.
எனவே, அயோடின் குறைபாடு இல்லாமல் இருப்பது அவசியம் என வலியுறுத்தினாா்.
மற்றொரு சுகாதார உதவி ஆய்வாளா் சுதாகா், பொதுமக்கள் பயன்படுத்தும் உப்பில் அயோடின் கலந்துள்ளதா என்பதை பரிசோதனை மூலம் விளக்கினாா்.
சுகாதார உதவி ஆய்வாளா் தாமோதரன் அயோடின் சத்து அதிகமுள்ள பால், முட்டை, இறைச்சி, கடல்சாா் உணா்வுகளை அதிக அளவில் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா்.
முகாமில் ஆஷா பணியாளா் சுந்தரம் செல்வி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அயோடின் சத்து தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

