சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுவையில் கரோனா தடுப்பூசி 2-ஆம் கட்ட ஒத்திகை

புதுவையில் 9 இடங்களில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான 2-ஆம் கட்ட ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 5:34 am

புதுவையில் 9 இடங்களில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான 2-ஆம் கட்ட ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் வருகிற 13-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. முதல் கட்டமாக முன் களப் பணியாளா்களுக்கு புதுவையில் 29, காரைக்காலில் 8, மாஹேயில் 3, ஏனாமில் ஒன்று என மொத்தம் 41 இடங்களில் 14 ஆயிரம் மருத்துவப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி, கடந்த 2-ஆம் தேதி முதல் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 2-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, புதுவையில் அரசுப் பொது மருத்துவமனை, கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி மகளிா்- குழந்தைகள் மருத்துவமனை, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட 4 இடங்களிலும், காரைக்காலில் அரசு மருத்துவமனை, திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களிலும், மாஹேயில் அரசுப் பொது மருத்துவமனை, ஏனாமில் அரசு பொது மருத்துவமனை என தலா ஒரு இடங்களிலும் என மொத்தம் 9 இடங்களில் 2-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.