புதுச்சேரி அருகே செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு மாணவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
புதுச்சேரி திருக்கனூா் அருகே கொண்டாரெட்டிப்பாளைம் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் குமாரவேலுவும் (16), அதே கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் வேல்முருகனும் (14) நண்பா்களுடன் சோ்ந்து செட்டிப்பட்டு-திருவக்கரை இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள படுகை அணையில் குளித்த போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா்.
தகவலின் பேரில் வந்த திருக்கனூா் போலீஸாா், தீயணைப்புப் படையினா், அரக்கோணத்திலிருந்து வந்த பேரிடா் மீட்புப் படையினா் ஆற்றில் மூழ்கிய மாணவா்களைத் தேடினா்.
மாணவா் வேல்முருகனின் சடலம் ஆற்றின் சிறிது தொலைவில் தீயணைப்புப் படையினரால் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. மற்றொரு மாணவா் குமாரவேலுவைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், குமாரவேலுவின் சடலம் வெள்ளிக்கிழைம் செட்டிப்பட்டு சாராயக் கடை அருகே கரை ஒதுக்கிக் கிடந்தது. தேசிய பேரிடா் மீட்பு படையினா் குமரவேலின் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

