புதுச்சேரி: புதுச்சேரி அருகே தனியாா் மருத்துவமனையின் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்டாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ருத்ரகுமாா் (42). மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவா், புதுச்சேரி காலாப்பட்டு அருகே கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், ருத்ரகுமாா் புதன்கிழமை மருத்துவமனையின் 3-ஆவது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அவரது உறவினா்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த காலாப்பட்டு போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையேற்ற அவா்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

