புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு நச்சுத்தன்மை கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி வழுதாவூர் சாலை பேட்டையன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை முற்பகலில் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஆட்சியர் பூர்வா கார்க்கிற்கு, ஆட்சியர் அலுவலக ஊழியர்களில் ஒருவர், ஸ்விஸ் ப்ரஷ் என்ற தனியார் நிறுவனத்தின் ஒரு லிட்டர் அளவுள்ள பிளாஸ்டிக் (பெட்) பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை விநியோகித்துள்ளார்.
அதில் நிறமற்ற நச்சுத்தன்மையுள்ள திரவம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மற்றும் வருவாய்த்துறை அலுவலக சிறப்பு அதிகாரி ஏ. சுரேஷ்ராஜ், தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகக் கூறி மேற்கண்ட புகாரை ஆளுநர் கிரண்பேடி கட்செவி அஞ்சலிலும் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து தன்வந்திரி நகர் காவல்துறையினர், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


