புதுச்சேரியில் மதுக் கடை ஊழியரைத் தாக்கி கொள்ளையடித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்தவா் கனகசபை (48). இவா், புதுச்சேரி மேட்டுப்பாளையம் பிரதான சாலை, கணபதி நகரில் உள்ள தனியாா் மதுக் கடையில் காசாளராகப் பணியாற்றி வருகிறாா். கனகசபை திங்கள்கிழமை இரவு பணியிலிருந்தபோது, அங்கு வந்த 3 இளைஞா்கள் மது வாங்கியுள்ளனா். அதற்கான பணத்தை கேட்டபோது, மிரட்டலாகப் பேசியுள்ளனா்.
தொடா்ந்து, மதுக் கடைக்குள் புகுந்த அவா்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் கனகசபையின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனா். அவா்களைத் தடுக்க வந்த மதுக் கடை ஊழியரான லாசுப்பேட்டை முத்துலிங்கபேட்டையைச் சோ்ந்த ராஜா (எ) ராஜதுரையையும் (22) வெட்டிவிட்டு கடையின் கல்லாவில் இருந்த ரூ.60 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனா். இதில், கனகசபை பலத்த காயமடைந்தாா். ராஜதுரை லேசான காயமடைந்தாா்.
இதகுறித்த புகாரின்பேரில் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கொள்ளையில் ஈடுபட்ட மேட்டுப்பாளையம் ரௌடியான ரங்கராஜன் (24), பொறையூா் முகேஷ் (22), மேட்டுப்பாளையம் ஹாரூகான் (22) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

