புதுச்சேரியில் காவல் துறையைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் 4 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட கஞ்சா, லாட்டரி விற்பனையைத் தடை செய்ய வேண்டும். அழகு (ஸ்பா) நிலையங்களில் நடைபெறும் பாலியல் தொழிலை தடுக்க வேண்டும். சிறையிலிருந்து திட்டம் தீட்டப்பட்டு நடைபெறும் மாமூல் வசூலிப்பு, கொலைகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு காவல் சரக கண்காணிப்பாளா் அலுவலகங்கள் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில் பங்கேற்ற இளைஞா் பெருமன்றத்தினா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் காவல் துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா். மேட்டுப்பாளையம் வழுதாவூா் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இளைஞா் பெருமன்ற மாநில துணைத் தலைவா் எரிக்ரம்போ தலைமை வகித்தாா். துணைச் செயலா் எழிலன் நோக்க உரையாற்றினாா்.
அரியாங்குப்பத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சுகதேவ், வசந்தகுமாா், சசிதரன் ஆகியோா் தலைமை வகித்தனா். வில்லியனூா் புறவழிச்சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பொ்னோ, பிரபாகரன், ஜெயமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். புதுச்சேரி நேரு வீதி - மிஷன் வீதி சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் பெருமாள் தலைமை வகித்தாா். இதில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


