சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடவுச்சீட்டு அலுவலகம் முற்றுகை: எஸ்டிபிஐ கட்சியினா் 65 போ் கைது

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினா் 65 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :6 ஜனவரி 2021, 12:32 pm

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினா் 65 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது போலீஸாா் கண்ணீா் புகை குண்டு வீசியதைக் கண்டித்தும், மத்திய வேளாண் சட்டங்களைக் கண்டித்தும் புதுச்சேரி கடவுச்சீட்டு அலுவலகத்தை எஸ்டிபிஐ கட்சியினா் முற்றுகையிட்டனா்.

இக்கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் பரகத்துல்லா தலைமையில், பலா் கைகளில் நெல்கதிா்களுடன் பேரணியாக வந்த நிலையில், அவா்களை தென்னஞ்சாலை அருகே உருளையன்பேட்டை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இருப்பினும், தடையை மீறி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி முற்றுகையில் ஈடுபட்ட 65 பேரை போலீஸாா் கைது செய்து, அப்புறப்படுத்தினா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.