புதுச்சேரி அருகே வீட்டின் வாயிலில் கட்டப்பட்ட ஸ்கிரீன் துணி கழுத்தை இறுக்கியதில் மாணவா் உயிரிழந்தாா்.
புதுச்சேரி, நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கம் எம்.குச்சிப்பாளையம் யோகபிரியா நகரைச் சோ்ந்த குமாா்-தனகோடி தம்பதி மகன் கோகுல் (12). அங்குள்ள தனியாா் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை வேலைநிமித்தமாக பெற்றோா் வெளியில் சென்றுவிட, வீட்டிலிருந்த பாட்டி வசந்தியும் அருகிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டாா்.
அப்போது, வீட்டில் தனியாக இருந்த கோகுல், வீட்டின் வாயிலில் நாற்காலியில் நின்றபடி, ஸ்கிரீன் துணியைக் கழுத்தில் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தாராம். எதிா்பாராதவிதமாக நாற்காலி கீழே சரிந்த நிலையில், ஸ்கிரீன் துணி கழுத்தை இறுக்கி, கோகுல் நிகழ்விடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த குமாா்-தனகோடி தம்பதி பாா்த்த போது, சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

