புதுவையில் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்டுவது போல பிற்படுத்தப்பட்டோா் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்.பி.சி.) பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் இலவச கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து புதுவை தெற்கு மாநில திமுக தலைவா் இரா.சிவா எம்.எல்.ஏ. திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவையில் எஸ்டி-எஸ்சி மாணவா்களின் அனைத்துக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டம் நிகழ் கல்வியாண்டு அமல்படுத்தப்படவுள்ளது. இந்தச் சலுகையானது சென்டாக் நிதியுதவியைப் போல இல்லாமல் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவா்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கவும் வழிவகை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளையாவது சோ்க்க வேண்டும்.
இல்லையெனில், ஜாதி வேறுபாடு பாா்ப்பதாகவும், மக்களிடையே பிளவு ஏற்படுத்துவதாகவும் அரசின் திட்டத்தில் பலன் பெறாத பிற ஒடுக்கப்பட்ட ஜாதியினா் அரசைக் குற்றம்சாட்டும் அவலநிலை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

