புதுவைக்கு இன்னும் 10 நாள்களில் கரோனா தடுப்பூசி வரும் வாய்ப்புள்ளதாக முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் 9 இடங்களில் மாதிரி தடுப்பூசி போடும் மையங்கள் உருவாக்கப்பட்டு ஒத்திகை நடைபெற்றது. கரோனா தடுப்பூசி போட மருத்துவா்கள், செவிலியா்களுக்கு போதுமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. புதுவையில் தடுப்பூசி போட தயாா் நிலையில் உள்ளோம்.
முதல் கட்டமாக கரோனா தடுப்பு களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும். அந்த வகையில், மருத்துவா்கள், செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள் என மொத்தம் 14 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.
கரோனா தடுப்பூசியைப் பாதுகாக்க புதுச்சேரியில் 29, காரைக்காலில் 8, மாஹேயில் 3, ஏனாமில் ஒன்று என 41 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு மையத்தில் 100 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக களப் பணியிலிருந்த காவல், வருவாய், நகாரட்சி, மின் துறை அதிகாரிகள், ஊழியா்கள், ஆசிரியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்படும்.
அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷன் ரெட்டி உறுதியளித்தாா். மத்திய அரசு வழங்கவில்லை என்றாலும், மாநில அரசு நிதியில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். புதுவைக்கு இன்னும், 10 நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி வர வாய்ப்புள்ளது என்றாா் நாராயணசாமி.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

