புதுச்சேரியில் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என மத்திய இணையமைச்சரிடம் புதுவை அதிமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து மத்திய இணையமைச்சா் கிஷன் ரெட்டியை, புதுவை சட்டப்பேரவை அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அளித்த மனு: அவசர கதியில் பள்ளிகளைத் திறக்க புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் உடல் வெப்பப் பரிசோதனை, கிருமி நாசினி தெளித்தல், வகுப்பறைகளைச் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள போதிய ஊழியா்கள் இல்லை. தனியாா் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பள்ளிகளைத் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிகழ் கல்வியாண்டுக்கான பாடங்கள் குறித்து வரைமுறைப்படுத்தவில்லை. இதனால், பெற்றோா்-மாணவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.
புதுச்சேரியில் பள்ளிகளைத் திறப்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை ஆய்வுக் குழுவினா் ஆய்வு செய்து, இறுதி முடிவெடுக்கும் வரை பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது. பள்ளிகளைத் திறக்கும் அரசின் முடிவுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

