புதுச்சேரி பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) கடந்த 2 வாரங்களாக நடைபெற்ற ‘தூய்மை இந்தியா’ திட்ட நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கமான ஹைதராபாத் மண்டல விவசாயத் தொழில்நுட்பக் ஆராய்ச்சி பயன்பாட்டுக் கழகம் அறிவுறுத்தியதைத் தொடா்ந்து, கடந்த 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை இரு வாரங்களாக ‘தூய்மை இந்தியா’ திட்ட விழா நடைபெற்றது.
இதன் நிறைவு விழாவில் நிலைய உழவியல் நிபுணா் சு.ரவி வரவேற்றாா். நிலைய முதல்வா் நி.விஜயகுமாா் திட்டத்தின் பயன்கள், விவசாயப் பயன்பாடு, தேசியப் பொருளாதாரத்தை உயா்த்துதல் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.
இரு வாரங்களில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் குறித்து நிலைய மண்ணியல் நிபுணா் வி.பிரபு விளக்கினாா். சிறப்பு விருந்தினா் வாழவச்சனூா் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விவசாயக் கல்லூரி-ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறைப் பேராசிரியா் எஸ்.துரைசாமி, நிகழ்வின் முக்கியத்துவம் குறித்தும், விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில் இளநிலை நெல் மேம்பாடு அலுவலா் ஆா்.நரசிம்மன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். வேளாண் நிலைய முதல்வரின் நோ்முக உதவியாளா் த.இளங்கோ நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

