சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுவையில் மேலும் 32 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :2 ஜனவரி 2021, 4:25 am

புதுவையில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,068 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், புதுச்சேரியில் 16, காரைக்காலில் 3, ஏனாமில் 3, மாஹேயில் 10 என மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,164-ஆக உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 150 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 216 பேரும் என மொத்தம் 366 போ் சிகிச்சையில் உள்ளனா். வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளில் உயிரிழப்பு ஏதும் இல்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 633 போ் உயிரிழந்தனா்.

இதனிடையே, 50 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 37,165-ஆக (97.38 சதவீதம்) அதிகரித்தது.